நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் குன்னூர் வி.பி.தெரு பகுதியில், துருவ அம்மன் கோயில் அருகில் 15/03/24 இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்வு நடைபெற்ற பொழுது இலவச கண்ணாடி பெற்ற பயனாளிகள் எண்ணிக்கை -60.மேலும் 38 பயனாளிகளுக்கு வெவ்வேறு பவர் requirements இருந்ததால் ஆர்டர் செய்யப்பட்ட ஸ்பெஷல் கண்ணாடிகளை இன்று வருகை புரிந்த பயனாளிகளுக்கு திகழ் அறக்கட்டளை நிறுவனர் திரு. கோவர்த்தனன் ராமசாமி, மக்கள் நற்பணி மையம் தலைவர் கன்டோன்மென்ட் வினோத்குமார்,மாவட்ட செயலாளர்,நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு 43Handymans நிறுவனர் ,பொது செயலாளர்,,நீலகிரி மக்கள் நற்பணி மய்யம்,, திரு.விஜயகாந்த் ஆகியோரின் தலைமையிலும்,
சிறப்பு அழைப்பாளர்களாககுன்னூர் வியாபாரிகள் சங்க தலைவர் திரு.பரமேஸ்வரன், செயலாளர் திரு.ரஹீம்,நீலகிரி சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் தலைவர் திரு.ரமணா சுரேஷ், மக்கள் நற்பணி மைய கௌரவத் தலைவர் திரு ராமகிருஷ்ணன்,
அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் சாதிக், இஸ்மாயில்,போதை வழக்கத்திலிருந்து பாதிக்கப்பட்ட நபர்களை விடுவிக்கும் திரு.பாபு சல்மான் மற்றும் ஆகாஷ், அர்ஃபாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணை ஆசிரியர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment