நீலகிரி மாவட்டம் உதகை நகரில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த நாள் முதற்கொண்டு பறக்கும் படையினர்களும், காவல்துறையினர்களும் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மட்டும் பரிசு பொருட்களை கொண்டு வருவார்கள் அப்படி கொண்டு வருகிறார்களா என்று தொடர்ந்து கடுமையான முறையில் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி கடுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த சோதனைகள் பொதுமக்கள் மட்டுமல்லாது அரசியல் வாதிகளின் வாகனங்களையும் சோதனை செய்கிறார்கள் அப்படி சோதனை செய்ததில் நேற்று மாலை கோத்தகிரியில் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் வாகனத்தில் இருந்து எட்டு இலட்சத்து ஐம்பாதாயிரம் ரூபாயை, (ரூபாய். 8,50,000) பறக்கும் படையினர் கைப்பற்றினார்கள் இந்த செய்தி நீலகிரி மாவட்டம் முழுவதும் காட்டு தீ போல பரவி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் இந்த வாகன சோதனை இன்று 18 4 2024 வியாழக்கிழமை இரவு வரை தொடரும் எனவும் நாளை பறக்கும் படையினரின் காவல்துறையினரும் வாக்குச்சாவடிக்கு சென்று அங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவுக்காக உதகை நகர தாலுகா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment