உதகையில் 16.4.2024 செவ்வாய் அன்று மாரியம்மன் தேர்த்திருவிழா
நீலகிரி மாவட்டம் உதகை நகரில் வருகின்ற 16.4.2024 செவ்வாய்க்கிழமை அன்று உதகை நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் காளியம்மன் திருக்கோயிலின் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளதால் அம்மன் திருத்தேர் தயார் செய்யும் பணிகள் ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது .
திருத்தேர் திருவிழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து விட்டு செல்வார்கள் அதனால் அன்றைய தினம் பல்வேறு தற்காலிக கடைகளை ரோடுகளில் ஒரங்களில் அமைப்பார்கள் அதில் ஒரு சில கடைகள் இன்றிலிருந்து கடைகளைப் போட்டு வியாபாரம் செய்து வருகிறார்கள் .
தமிழக குரல் செய்திகளுக்காக உதகை தாலூக்கா செய்தியாளர் விஜயராஜ் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment