நீலகிரி மாவட்ட வழக்குரைஞர் சங்கத்தின் சார்பாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு கோத்தகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திருமதி .வனிதா அவர்கள் தலைமையேற்று சிறப்பித்தார். மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட மாண்புமிகு நீதிபதி திரு. அப்துல் காதர் அவர்களும், மாவட்ட குடும்ப நீதிபதி மாண்புமிகு திரு. ஸ்ரீதர் அவர்களும், சார்பு நீதிமன்ற நீதிபதி திரு. ஸ்ரீதர் அவர்களும் சட்டப்பணி ஆணையக் குழுவின் செயலாளர் திரு. லிங்கம் அவர்களும், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு திரு. மோகன கிருஷ்ணன் அவர்களும், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு திரு. தமிழ் இனியன் அவர்களும், மற்றும் நீலகிரி மாவட்ட வழக்கறிஞர்கள், சங்கத்தின் தலைவர் திரு. மகாதேவன், துணைத்தலைவர் திரு. சசிகுமார், செயலாளர் திரு.சிவக்குமார், துணைச் செயலாளர் திருமதி. மேனகா, பொருளாளர் திருமதி. சகிலா, மற்றும் மூத்த வழக்கறிஞர்களும், ஏனைய வழக்கறிஞர்களும் நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொண்டு சர்வதேச மகளிர் தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள். விழாவில் திருமதி. சகிலா அவர்கள் வாழ்த்து உரையை கூறினார். திருமதி .மேனகா அவர்கள் நன்றியுரை கூறினார். இவ்விழாவினை வழக்குரைஞர் திரு. பாலா நந்தகுமார் அவர்கள் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினார் .
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத் குமார். மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment