நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் திருகாந்தல் அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருமடாலயத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் பெருமானுக்கு மகா சிவராத்திரி பெருவிழா இன்றைய தினத்தில் நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 8 March 2024

நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் திருகாந்தல் அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருமடாலயத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் பெருமானுக்கு மகா சிவராத்திரி பெருவிழா இன்றைய தினத்தில் நடைபெற்றது


நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் திருகாந்தல் அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருமடாலயத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் பெருமானுக்கு மகா சிவராத்திரி பெருவிழா இன்றைய தினத்தில் நடைபெற்றது

திருக்காந்தல் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாத பெருமாள் மகா சிவராத்திரி விழாவானது  இன்றைய தினத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த விழாவில் காலை 7 மணியளவில் கால சாந்தி பூசையும் அதனைத் தொடர்ந்து 11 மணியளவில் உச்சிக்கால பூஜையும் அதனைத் தொடர்ந்து 11:30 மணி  ஐயனின் அருள் பிரசாதமான அன்னதானமும் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து பிற்பகல் 2 மணி அளவில் விநாயகர் வழிபாடு யாகப் பூஜை மாலை 3:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு அபிஷேகம் மாலை 5 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது மாலை 6 மணிக்கு சுவாமி திருக்கோயில் வலம் வருதல் மற்றும் பஜனை ஆடல் பாடல் பரதநாட்டிய நிகழ்ச்சி போன்ற கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தது 

மேலும் தவத்திரு மறை ஞான தம்பிரான் சுவாமிகள் மற்றும் அருளாலர்கள் அருளுரையும் இடம்பெற்றிருந்தது இரவு 9 மணி அளவில் பட்டிமன்றமும் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இரவு பக்தி திரைப்படம் என ஐயனின் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களோடு இன்றைய மகா சிவராத்திரி விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் இன்றைய நாள் முழுதும் அய்யனின் அருள் பிரசாதமான அன்னதானம் வழங்கப்பட்டது


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணை ஆசிரியர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad