நீலகிரி மாவட்டத்தில் விதிகளுக்கு புரோம்பராக மதுபோதையில் ஆட்டோ ஓட்டுனர் தனது எல்லைக்கு மேற்பட்ட பகுதியில் இயக்கம் மற்றும் போதையில் வாகனங்களுடன் விபத்து இதன் காரணமாக அவரது ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆட்டோ உரிமம் ரத்து செய்ய பொதுமக்கள் கோரிக்கை...
03/03/2024 இன்று மாலை 7:30 மணியளவில் Nagapattinam- Coimbatore - Gundlupet Highway குன்னூர் உதகமண்டலம் சாலையில் எல்லநள்ளி எனும் பகுதியில் மூன்று சக்கர ஆட்டோ ஓட்டுநர் மணி வாகன எண் TN43E5137 மது போதையில் சற்றும் நிதானம் இல்லாமல் எதிரே வந்த சுற்றுலா வாகனம் டொயோட்டா இனோவா கிரிஸ்டா எனும் வாகனத்தின் மீது மோதி தலைகீழாக கவிழ்த்து விபத்து ஏற்படுத்தி விட்டார்
ஏற்கனவே அரசானை முறையாக இல்லாமால் தன்னிச்சையாக முடிவு எடுத்து நீலகிரி மாவட்ட செயலாளர் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அவர்களால் வழங்கப்பட்ட 15கிலோமீட்டர் எல்லை அளவை தாண்டி இயக்குவதால் பல பிரச்சினைகள் உள்ளன
இந்த நபரும் அவர் இயக்கும் AUTO, TN43E5137 ஏற்கனவே பலமுறை எல்லை தாண்டி சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதால் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் சிறை பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது இந்த நபர் மேலும் மது போதையில் தான் எப்பொழுதும் வாகனத்தை இயக்குவார் என்றும் இதற்காக அடிக்கடி இவர்மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசும் அரசு அதிகாரிகளும் இதுகுறித்து உடனடி நடவடிக்கையாக இவருடைய ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய பட வேண்டும் என்றும் TN43E5137 வாகனத்தின் பர்மீட் ரத்துச் செய்யவும் நீலகிரி மாவட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment