அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம் ,போதைப் பொருளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மாவட்ட கழக செயலாளர் கப்பசி டி வினோத் அவர்களின் தலைமையில், உதகை நகர செயலாளர் கா. சண்முகம் அவர்களின் ஏற்பாட்டில், மனித சங்கிலி போராட்டம் தொடங்கப்பட்டு திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் கே .ஆர். அர்ஜுனன், மாவட்ட துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ,மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் பாலநந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர் டி. கே .தேவராஜ், பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம் பாபு ,மகளிர் அணி சர்மிளா, நகர மன்ற உறுப்பினர்கள் லயோலா குமார் மற்றும் அன்புச்செல்வன், நகர இளைஞரணி இணைச் செயலாளர் துர்கா பிரபு, நகர கிளை செயலாளர்களும் கழகத்தின் பூத் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்படக் கலைஞர் என். வினோத் குமார்.
No comments:
Post a Comment