நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 2 March 2024

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது...


நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது...

 தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் சார்பில் நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை  முகாம் மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மேலும் இப்பகுதியின் அரசு வட்டார மருத்துவ அலுவலர் திரு டாக்டர் முருகேஷ் அவர்களின் ஒத்துழைப்பின் பெயரில் இத்தலார் அரசு மருத்துவமனையின் பணியாளர்கள் திருமதி குமாரி மற்றும் சுசிலா அவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு அனைத்து பயனளிகளுக்கும் பிபி மற்றும் சுகர் பரிசோதனைகளும் இலவசமாக செய்தனர் இதில் 120க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அத்துடன் இலவச கண் கண்ணாடிகளையும் மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்...

 இந்த நிகழ்வினை நமது தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் சுரேஷ் ரமணா அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார் இலவச கண்ணாடிகளை வழங்கினார் மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு பரிந்துரை கடிதமும் வழங்கப்பட்டது...

 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எடக்காடு  மற்றும் எமரால்டு பகுதி தன்னார்வலர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தன இப்பகுதியின் பொறுப்பாளர்களான சுரேஷ் K.S.Tமகேந்திரன் பீனா மேகலா வெண்ணிலா யோகராஜ் சாந்தி மணிகண்டன் சமூக ஆர்வலர் திரு சங்கர் திரு நாட்டாமை மணி அவர்கள் திரு ரங்கராஜ் அப்பாஸ் மணி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரலாய் கலந்து கொண்டனர்...

 இதில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடை மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது... 

பொதுமக்களிடம் இதைப் பற்றி கருத்து கேட்கும் பொழுது இந்த கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற இந்த பரிசோதனை முகாம் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது இதுபோன்று இன்னும் பல பகுதிகளில் இதுபோன்ற முகாம் நடைபெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் அதையும் மனமகிழுவுடன் ஏற்றுக் கொண்ட நமது தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் மாநில துணைத்தலைவர் சுரேஷ் ரமணா அவர்கள் மேலும் இப்பதிகளை சுற்றி பல பகுதிகளில் இதுபோன்ற முகாம்களும் மருத்துவ முகாம்களும் இனி வருகின்ற நாட்களில் நடத்த ஆவணம் செய்வோம் என உறுதி அளித்தார் இதனைத் தொடர்ந்து எமரால்டு சுற்றுவட்டார பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்... 

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணை ஆசிரியர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad