நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா மஞ்சூர் சரகத்திற்கு உட்பட்ட மஞ்சூர் காவல் நிலையம் பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களாக கடத்தி வருவதாகவும் இதில் பள்ளி குழந்தைகளும் இளைஞர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மஞ்சூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்ட பொழுது மஞ்சூரில் இருந்து இன்று 28/2/24. காலை 10 மணி அளவில் இத்தலார் பகுதியைச் சேர்ந்த ஜக்கரியா பாய் என்பவர் தனது ஸ்கூட்டி வாகனத்தில் Hans பெரிய பாக்கெட் சுமார் 25 சிறிய பாக்கெட் சுமார் 150 ஆகியவை தனது ஸ்கூட்டி வாகனத்தில் கடத்தி வந்தவரை லாரன்ஸ் என்ற இடத்தில். SB. SS I அப்பாஸ் அவர்கள் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர் கூறுகையில் மஞ்சூர் மற்றும் எமரால் பகுதிகளில் அதிகப்படியான ஹான்ஸ் நடமாட்டம் இருப்பதால் ஆங்காங்கே அதிரடி சோதனைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இது குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தாலும் எங்களுக்கு தகவல் அளிக்கலாம் தங்களது தகவலின் பெயரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணை ஆசிரியர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment