எமரால்டு அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அண்ணா நகரில் பிப்ரவரி 16ம் நாள் பள்ளி ஆண்டு விழாவில் பட்டமளிப்பு... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 17 March 2024

எமரால்டு அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அண்ணா நகரில் பிப்ரவரி 16ம் நாள் பள்ளி ஆண்டு விழாவில் பட்டமளிப்பு...


பள்ளி ஆண்டு விழாவில் பட்டமளிப்பு எமரால்டு அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அண்ணா நகரில் பிப்ரவரி 16ம் நாள் பள்ளி ஆண்டு விழா மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அம்மா திருமதி.தி. கோமதி தலைமையிலும் வட்டார கல்வி அலுவலர்கள் திரு. ரா. கார்த்திக் மற்றும் திருமதி. ந. வனிதா அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

 விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வந்திருந்த அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி டே ரெஜிஸ்டெல்லா  வரவேற்றுப் பேசினார்.

 


கணித ஆசிரியர் திரு. லி. ரமேஷ், தலைமை ஆசிரியர் சார்பாக ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். ஆசிரியர்கள் திருமதி ந.ச. வனஜா, திரு.  ந. மணிகண்டன் மற்றும் திருமதி K. சகிலா அருண் பரிசுகளுக்குரிய மாணவர்களின் பெயர் பட்டியலை  தொகுத்து வழங்கினார்கள்.


 கராத்தே மாஸ்டர் திரு விக்னேஸ்வரன் மாணவர்களின் கராத்தே சாகச நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்.


 மாணவ மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.


 மேலும் எட்டாம் வகுப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் மற்றும் கௌரவிக்கும் விதமாக பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.


 பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் மற்றும் விழாவிற்கு அன்பளிப்பு கொடுத்த அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.

 

வரலாறு ஆசிரியர் திரு ரா. சுரேஷ் நன்றி கூறினார்.

 

நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு  பெற்றது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணை ஆசிரியர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad