சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்(SSTA) சார்பாக நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முன்பு இரண்டாவது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 28 February 2024

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்(SSTA) சார்பாக நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முன்பு இரண்டாவது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம்...

 


சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்(SSTA) சார்பாக நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முன்பு இரண்டாவது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம்...

          நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில்  தொடர்ந்து இரண்டாவது நாளாக SSTA சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311 ல் கொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்ற கோரி சென்னை DPI வளாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைதைக் கண்டித்தும் ஒற்றைக் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதிய அரசாணையை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும் மாவட்ட தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.



01.06.2009 க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 01.06.2009 க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 28370 என்றும் அதன்பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 25200 என்றும் "ஒரே பணி,ஒரே கல்வி தகுதி" என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதை களையக்கோரி கடந்த 12 ஆண்டுகளாக எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.



2018 ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தின் போது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் நேரில் வந்திருந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 20,000 இடைநிலை திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை வரிசை எண்-311ல் ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" “சம ஊதியம்" வழங்கப்படும் என்ற எங்கள் கோரிக்கையை இடம் பெறசெய்தார்கள்.



புதிய அரசு பதவி ஏற்று இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது தமிழக முதல்வர் 01.01.2023ல் புத்தாண்டின் முதல் அறிவிப்பாக போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களை கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.



போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்போது கல்வித் துறை உயர் அதிகாரிகளால் மூன்று மாதத்தில் இப்பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 2009-இல் பணியில் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஓய்வு பெற்று வருகிறார்கள். பணி நியமனம் பெற்று 14 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர்கள் பெறும் ஊதியத்துடன் பொருளாதார நெருக்கடியால் பணிபுரிந்து வருகிறோம். 2023 செப்டம்பர்-28 முதல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்ட மாபெரும் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தினோம். அக்டோபர் 5ல் நடந்த கடைசிகட்ட பேச்சுவார்த்தையில் கண்டிப்பாக மூன்று மாதங்களுக்குள் 3நபர் ஊதியக்குழு அறிக்கை பெற்று சமவேலைக்கு சம ஊதிய கோரிக்கையை சரிசெய்கிறோம் என்ற வார்த்தையும் தற்போதுவரை நிறைவேற்றப்படவில்லை.



தற்போது பிப்ரவரி 19 முதல் சென்னை DPI ல் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறோம். அறவழியில் போராடிவரும் ஆசிரியர்களை அராஜக போக்கில் தினமும் சராசரியாக 1000க்கு மேற்பட்டோர்களை காலையிலேயே கைது செய்து மாலை வரை மண்டபம் தேடி அலைந்து சரியான உணவு மற்றும் குடிநீர் கூட வழங்காமல் அலைகழிக்கப்பட்டு பல்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.



கடந்த 22.02.24 முதல் ஒற்றைக் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கைது நடவடிக்கையின் போது அரசு தரும் உணவை மறுத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறோம் . அதே போல கடந்த 8 நாட்களாக மாவட்டங்களில் சுமார் 10000 பேர் பள்ளியை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் இருக்கிறார்கள். கோரிக்கை முடியும் வரை எங்கள் போராட்டத்தை கைவிடுவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311ல் கொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்ற கோரி சென்னை DPI வளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைதைக் கண்டித்தும் ஒற்றைக் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதிய அரசாணையை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும் மாவட்ட தலைநகரில் (26.02,24) முதல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) சார்பாக தெரிவிக்கப்பட்டது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad