கூடலூரை அடுத்துள்ள நாடுகானி பகுதியில் கால்நடை வளர்போர்க்கு அசோலா பசுந்தீவனம் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
ஆல் தி சில்ரன் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை வகித்தார்.
சோலிடரிடட் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், ஏகம் அறக்கட்டளை ரவீந்திரன், பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க செயலாளர் சிவசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சோலிடாரிடட் நிறுவன விவசாய பயிற்சியாளர் ஆரோக்கியசாமி கால்நடை வளர்ப்பு முறைகள், கால்நடை தீவணமான அசோலா வளர்ப்பதின் முக்கியத்துவம் குறித்து அசோலா பயிரிடும் முறைகள் குறித்தும் செயல் விளக்க பயிற்சி அளித்தார்.
அசோலா கால்நடைகளுக்கு முக்கிய தீவனமாக விளங்குகிறது.
இது கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து கொடுத்து அவற்றின் வளர்ச்சிக்காக கொடுக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அசோலா வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
பங்கேற்றவர்களுக்கு அசோலா தீவன விதைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மற்றும் கால்நடை வளர்ப்பு பால் உற்பத்தியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment