நீலகிரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாடுகளை வளர்க்கும் உரிமையாளர் ஒருவர் தனது மாடுகள் நனையாமல் மேய்ந்து வர என்ன செய்வதென்று யோசித்த அவர் நாம் மழையில் நனையாமல் செல்ல பயன்படுத்தும் ரெயின் கோட் போன்று அந்தக் கன்றுக்குட்டியின் உடலில் பிளாஸ்டிக் தாளை ரெயின் கோட்டை போன்ற வடிவமைப்புடன் கட்டி அனுப்பியுள்ளார். அவ்வாறு அனுப்பிய ஒரு கன்றுக்குட்டி மழையில் மேயும் காட்சி... இந்த காட்சியை சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்துச் சென்றனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment