எமரால்டு பஜார் பகுதியில் கரடி நடாமாட்டம்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 7 April 2023

எமரால்டு பஜார் பகுதியில் கரடி நடாமாட்டம்...

 


நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் நேற்றைய தினம் காலை 5.25 மணி அளவில் எமரால்டு பஜார் பகுதியில் கரடி ஒன்று வந்துள்ளது இதை பார்த்து அந்த சமயத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த பயணி ஒருவர் அலறி ஓடும் காட்சியும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது இந்த பகுதியில் பள்ளிக்கூடங்கள் வணிக நிறுவனங்கள் உணவகங்கள் அஞ்சலகங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சந்தைக்கு மக்கள் கூடும் இடமாகவும் இந்த பகுதி இருப்பதால் இந்த பகுதியில் கரடியின் நடமாட்டத்தைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் உடனடியாக கூண்டு வைத்து இந்த கரடியை பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...  


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad