"எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம்" விழா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அண்ணா நகரில் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் திருமதி டே. ரெஜிஸ் டெல்லா முன்னிலையில் தொடங்கப்பட்ட இவ்விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி ஸ்ரீதேவி தலைமை தாங்கினார். பெற்றோர்கள் திரளாக வந்திருந்து விழாவை சிறப்பித்தார்கள்.
மாணவ மாணவிகளின் திறமைகள் பெற்றோர்கள் முன்னிலையில் சிறந்த முறையில் வெளிப்படுத்தப்பட்டன பாடல் களம் ஆடல் களம் கதைகள் குரல் வினாடி வினா இன்று பல செயல்பாடுகள் இந்த விழாவில் இடம் பெற்றன. ஆசிரியை திருமதி வனஜா சிறப்பான முறையில் இந்நிகழ்ச்சியை நடத்தினார்.
பெற்றோர்கள் இவ்விழாவை கண்டு களித்து மிகவும் பாராட்டு சென்றனர் தேநீர் இனிப்பு இவைகளுடன் இவ்விழா சிறப்பான முறையில் நிறைவு பெற்றது. ஆசிரியர் திரு சுரேஷ் அவர்களுடைய நன்றியுரைக்குப்பின் நாட்டுப் பன்னுடன் இவ்விழா நிறைவு பெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment