நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
.கூடலூரில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் அம்பேத்கர்,பெரியார், சுயமரியாதை,சமூக நீதி,மதசார்பின்மை ஆகிய வார்த்தைகளை தவிர்த்தும் அரசின் உரையை புறக்கணித்தும் உறையாற்றியுள்ளார். மேலும் சட்டமன்றத்தை அவமதிக்கிற வகையில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே வெளிநடப்பு செய்துள்ளார் தமிழ்நாடு கவர்னரின் இத்தகைய நடவடிக்கை தமிழ்நாட்டு மக்களையும், ஜனநாயகத்தையும் அவமதிப்பதாக உள்ளது எனவே இன்று செவ்வாய்க்கிழமை மாலை கூடலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு காங்கிரஸ் ,சிபிஐ( M) சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் , மனிதநேய மக்கள் கட்சி ,மனித நேய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறது. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக,முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி தோழர்கள் கட்சிகள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment