குந்தா மண்டல் பா.ஜ.க.சார்பில் சுவாமி விவேகாநந்தரின் பிறந்த நாள் விழா மண்டல் தலைவர் ரமேஷ் ஜி தலைமையில் நடைப்பெற்றது. மண்டல் பொது செயலாளர் திரு.திவாகர் ஜி, மண்டல் விவசாய அணி தலைவர் மோகன்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட சுவாமி விவேகாநந்தரின் படத்திற்கு எடக்காடு சின்ன கணிகை ஊர் தலைவர் ஐயா திரு.பெள்ளி கவுடர் ஜி அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவில் சூண்டட்டி ஊர் தலைவர் ஜோகி கவுடர், ஆல்துரை, ராதாகிருஷ்ணன், சரவணன், நடுஹட்டி கிருஷ்ணன், சிவகுமார், சுப்பரமணி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். எடக்காடு ஸ்வயம் சேவக் பிரபாரி எம்.எஸ்.மகேஷ் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....




No comments:
Post a Comment