மஞ்சூர் காவல் நிலையம் சார்பாக மஞ்சூர் பஜாரில் செல்வி.விஜயலட்சுமி, துணை காவல் கண்காணிப்பாளர், உதகை ஊரக உட்கோட்டம். மேலும் ஆய்வாளர் திருமதி கண்மணி, உதவி ஆய்வாளர்கள் செல்வன், சசிக்குமார், வேல்முருகன் ஆகியோர் தலைமயில் 23.12.2022 பிற்பகல் 12.30 மணிக்கு. இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் முக்கியதுவம் குறித்த விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது, இதில் சுமார் 30பேர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தலைகவசம் அணியாமல் வந்த 10 வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சார்பாக இலவசமாக தலைகவசங்கள் வழங்கப்பட்டது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு.



No comments:
Post a Comment