நீலகிரி மாவட்டம் கூடலூர் 16ம் வார்டிற்குட்பட்ட ஆசாத் மைதானத்தில் இரண்டு நாட்களாக கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது இதில் 15அணியினர் விளையாடினார்கள் இறுதியில் முதல் கோப்பை PFC அணியினர் தட்டிசென்றார்கள் முதல் கோப்பை காசிம்வயல் பகுதி நகரமன்ற உறுப்பினர் ஆபிதாபேகம் சார்பில் வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றி கோப்பையெய் வழங்கினார்!!
இரண்டாம் கோப்பை சூப்பர் பாய்ஸ் அணியினருக்கு திரு.நசீர் அவர்கள் வழங்கினார்! இதில் அனைவருக்கும் பதக்கங்களையும் பரிசுகளையும் தாஹிர் நியாஸ் அனிபா ஆலிகுட்டி யாசித் நவ்சாத்அலி பைசல் பாதுஷா சுஜின் முகமது அப்ஷல் சன்ஜய் அஸ்கர் ஆகியோர் வழங்கி பாராட்டினார்கள்.
இறுதியாக கவுன்சிலர் உறையாற்றியபோது இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் விளையாட்டு துறையில் ஈடுபட்டு கூடலூர் பகுதிக்கு நற்பெயரை வழங்கும் விதமாக மாநில அளவிலும் தேசிய அளவிலும் பரிசுகளை பெற்று தறுமாறு கேட்டு கொண்டார்..
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜகான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.



No comments:
Post a Comment