பந்தலூரை அடுத்துள்ள நியூஸ் மெட்ரிக் பள்ளியில் வைத்து செம்மொழி IAS பயிற்சி மையத்தின் NEW TEST BATCH அறிமுகம்* விழா நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 28 November 2022

பந்தலூரை அடுத்துள்ள நியூஸ் மெட்ரிக் பள்ளியில் வைத்து செம்மொழி IAS பயிற்சி மையத்தின் NEW TEST BATCH அறிமுகம்* விழா நடைபெற்றது.


நீலகிரி மாவட்டம் பந்தலுர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள்,சமூக ஆர்வலர்கள் ,TEWS கல்வி.குழுமம் இணைந்து படித்த ஏழை எளிய மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக இலவசமாக நடத்தும் போட்டித்தேர்வு பயிற்சி மையமான செம்மொழி IAS அகாடமி தனது  தொடர் பயணத்தை இன்று தொடங்கியது.

இரண்டாவது வருடத்தின் முதல் செயல்பாடாக எதிர்வரக்கூடிய.TNPSC  தேர்வுகளுக்காக சிறந்த முறையில் பாட வல்லுனர்களால் மூலம் தயார் செய்த  TEST BATCH யினை சமீபத்தில் நடைபெற்ற SI போட்டித்தேர்வில் வெற்றிப்பெற்று சேரம்பாடி காவல்நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியேற்றுள்ள உயர்திரு திரு.பா.இராஜ்குமார் அவர்கள் அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் தொடர்ந்து பயணித்தால் வெற்றி நிச்சயம் எனவும் மற்றும்  போட்டித்தேர்வு குறித்த பல நல் ஆலோசனைகளை வழங்கினார் என்பனை தெரிவித்துக்கொள்கிறோம்.


நமது பயிற்சி மையத்தின் TEST BATCHயினை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வழங்கிய ஜயா அவர்களுக்கு நமது செம்மொழி IAS பயிற்சி மையம் சார்பாக வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜகான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.... 

No comments:

Post a Comment

Post Top Ad