நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீ மதுரை அடுத்துள்ள களி குன்னு பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் வளர்ந்து வந்த ஆட்டை சிறுத்தை கடித்து தின்றது இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி 4.11.22 இன்று ஸ்ரீமதுரை கிராமம் களிக்குன்னு பகுதியில் வசிக்கும் அப்து என்பவரது வளர்ப்பு ஆடு ஒன்றை அதிகாலை மாமிச உண்ணி சிறுத்தையனாது அடித்து கொன்று, ஆட்டின் பின்பகுதியில் சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளது. தகவல் கிடைத்ததும் கூடலூர் வனத்துறை ரேஞ்சர் ராஜேந்திரன் யானை கண்காணிப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, பார்வையிட்டு தணிக்கை செய்து, ஆறுதல் கூறி, உரிய ஆவணங்கள் வழங்க, பெற்று வரப்பட்டது.
மேலும் ஆட்டுச்சாலையை நான்குபுறமும் பலப்படுத்த அறிவுறுத்ததியும், தொடர்ந்து இரண்டு கேமராக்கள் வைத்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யயப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார மக்களை பாதுகாப்பாக இருக்கும் மறு அறிவுரத்தப்பட்டது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.


No comments:
Post a Comment