தேசிய ஊட்டச்சத்து மாதம் இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் மூலம் செப்டம்பர் மாதம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது, இதன் தொடர்ச்சியாக கூடலூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக தர்மகிரி குழந்தைகள் மைய வரம்பில் அனுசரிக்கப்பட்டது.
இதில் தர்மகிரி அங்கன்வாடி பணியாளர் திருமதி. ஆசியா அனைவரையும் வரவேற்றார், கூடலூர் போஷன் அபியான் வட்டார திட்ட உதவியாளர் திரு. மு. பாரதிராஜா தலைமை தாங்கி ஊட்டச்சத்து, கர்ப்பகால உணவுமுறை, தாய்ப்பால், குடற்புழு நீக்கம், உயிர்சத்து-ஏ திரவம், வயிற்றுபோக்கு, சத்து மாத்திரைகள் குறித்துதான ஊட்டச்சத்து கருத்துகளை விழிப்புணர்வகளாக வழங்கினார். சளிவயல் அங்கன்வாடி பணியாளர் திருமதி. ராஜம்மா நன்றி கூறினார். இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பயனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் முப்பதிற்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் கே.எஸ்.டி மகேந்திரன் மற்றும் மலை மாவட்ட செய்தி பிரிவு


No comments:
Post a Comment