குன்னூர் காட்டேரி பூங்கா அருகில் டீ கடையில் கார் புகுந்து விபத்து; இருவர் கவலைக்கிடம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 September 2022

குன்னூர் காட்டேரி பூங்கா அருகில் டீ கடையில் கார் புகுந்து விபத்து; இருவர் கவலைக்கிடம்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பூங்கா அருகில் கேரளா பதிவு எண் கொண்ட வாகனம் உதகையில் இருந்து அதிவேகமாக வந்து பூங்கா அருகில் இருந்த டீ கடைக்குள் புகுந்தது அதில் வந்த 9 பேர்களில் இருவர் நிலமை கவலைக்கிடம் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.


இதனால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர் அது மட்டும் இல்லாமல் சுற்றுலா வரும் வாகனங்களும் வாகன ஓட்டுனர்களும் கவனத்துடன் வரவேண்டும் ஏனெனில் விலைமதிப்பற்றது நம் உயிர் அந்த உயிரினை பாதுகாப்பாக கொண்டு செல்லும் பொறுப்பு ஒவ்வொரு ஓட்டுனரின் கையிலும் உள்ளது ஆகவே மெதுவாகத்துடன் பொறுமையாக மலைப்பகுதியில் பயணம் செய்தால் நல்லது என்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர் அவர்களுடன் சேர்ந்து நமது மக்கள் தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு சார்பாக சுற்றுலா பயணிகளை மலைப்பகுதியில் வாகனங்களை இயக்கும்போது குறிப்பிட்ட கியர்களில் குறிப்பிட்ட வேகத்துடன் செல்லுமாறு வேண்டிக்கொள் விடுக்கிறோம்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் கார்முகில்

No comments:

Post a Comment

Post Top Ad