இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ஓடும் வாகனங்களும் அன்றைய தினம் செயல்படாது என அறிவித்துள்ளனர், இதனது முக்கிய நோக்கமே இதனால் கூடலூரில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தமிழக அரசின் கவன ஈர்ப்பை கொண்டு செல்லும் நிலையாகும் எனவே அனைத்து பொதுமக்களும் வாகன ஓட்டுனர்களும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என இந்த போராட்டத்தை முன்னிறுத்தும் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைப் பற்றி அவர்களிடம் கேட்கும் பொழுது நமது பிரச்சினையை தனிப்பட்ட ஒருவர் எடுத்துச் செல்லும் போது அது தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது மிகவும் கடினம் எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் நமது பகுதியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் உதவிகரமாக இருக்கும் எனவே ஊர் கூடி தேர் இழுத்தால் இந்த பிரச்சனையும் முடிவுக்கு வரும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் ரத்து செய்ய ஏதேனும் வழிவகை பிறக்கும், எனவே தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வரை இந்த இரண்டு நாட்கள் அனைத்து கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றி நூதன போராட்டத்திற்கு தாங்கள் அனைவரும் அளித்த ஒத்துழைப்பு போலவே நாளைய தினம் நடைபெறவுள்ள முழு கடையடைப்பிற்கும் தங்களது மேலான ஆதரவை எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளனர்.


No comments:
Post a Comment