விவசாய கடன் தள்ளுபடி - அனைத்து சங்க ஆதரவுடன் நீலகிரி ஆரிகவுடர் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.
நீலகிரி மாவட்டம் உதகை ATC திடலில் நீலகிரி மாவட்ட அனைத்து சங்கங்களின் ஆதரவுடன் ஆரி கவுடர் விவசாயிகள் சங்கம் 16.6.2026 செவ்வாய் அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் சமவெளிப்பகுதிகள் போல் அல்லாமல் நீலகிரியில் விவசாயம் செய்ய ஏக்கருக்கு ரூபாய் 2 இலட்சம் செலவு ஆவதால் விவசாயிகள் குறைந்தது ஏக்கருக்கு ரூபாய் 2 இலட்சம் கடன் பெற்றுள்ளதால் நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் அனைத்து விவசாய கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்து தமிழக அரசு சிறப்பு கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டி ஆர்ப்பாட்டம் விவசாயிகள் செய்தனர். திரளான விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:
Post a Comment