உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்
நீலகிரி மாவட்டம் உதகை, மேரா யுவ பாரத் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, உதகை அரசினர் கலைக்கல்லூரி அருகே உள்ள புதர்கள் குப்பைகளை அகற்றி தூய்மை பணியினை செய்தனர் , மரங்களை நட்டனர், உணவு இடைவெளிக்குப் பிறகு உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கு மேரா யுவ பாரத் இணை இயக்குனர் விவேக் தலைமையில் நடைபெற்றது , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ரஞ்சித் அனைவரையும் வரவேற்றார் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சுரேஷ் ரமணா , ஃபியூச்சர் இந்தியா தலைவர் மதிவண்ணன், சமூக ஆர்வலர்கள் சத்தியசீலன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment