கன்னேரிமுக்கில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 15 May 2026

கன்னேரிமுக்கில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்


கன்னேரிமுக்கில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு மூர்த்தி அவர்களின் பேக்கரியில் பொறுத்தப்பட்டுள்ள சிசி டிவியில் கருஞ்சிறுத்தை ஹாயாக உலாவந்த காட்சியை கண்ட பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். இத்தனை காலம் வனத்துறையினர் நடவடிக்கை இல்லாமல் இருந்த நிலையில் புதிய  ஆட்சி பொறுப்பேற்றுள்ள தால் உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுத்து கன்னேரிமுக்கு குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் கருஞ்சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad