உதகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆ.இராசா MP வழங்கினார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 January 2026

உதகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆ.இராசா MP வழங்கினார்


உதகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆ.இராசா MP வழங்கினார் .

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தலைமை செயற்குழு உறுப்பினர் கே.தம்பி இஸ்மாயில் அவர்கள் ஏற்பாட்டில் 

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில்,

 கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது, செயற்குழு உறுப்பினர் கே.தம்பி இஸ்மாயில் வரவேற்றார்.


நலத்திட்ட உதவிகளை கழக துணை பொதுச்செயலாளரும் - நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ஆ. இராசா அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.


மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், Expo செந்தில், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா, உதகை மேற்கு நகர பொறுப்பாளர் ரமேஷ், உதகை வடக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் தொரை, பொதுக்குழு உறுப்பினர் வாணீஸ்வரி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், விசாலாட்சி தலைமை கழக பேச்சாளர் பாண்டியராஜ் ஆகியோர் உட்பட கழக நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

உதகை கிழக்கு நகர செயலாளர் ஜார்ஜ் நன்றி கூறினார்.


நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் ராஜேஷ்.

No comments:

Post a Comment

Post Top Ad