லக்கடி பவானி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அவலாஞ்சி அருகே உள்ள லக்கடி பவானி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவானது இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான பக்த கோடிகள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் இந்த ஆலயம் வனப்பகுதிக்குள் இருப்பதால் இன்று ஒரு நாள் மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர் அனைவருக்கும் அம்மனின் அருள் பிரசாதமான அன்னதானம் வழங்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment