நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கில் அமைந்துள்ள சல்லிவன் பூங்கா ஆகஸ்ட் 15 அன்று திறப்புவிழா நடைபெறுகிறது தோட்டக்கலைத்துறையினர் அதற்க்கான முன்னேற்பாடுகளை சுறுசுறுப்பாக செய்துவரும் நிலையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கா. ராமச்சந்திரன் அவர்கள் சல்லிவன் பூங்காவை பார்வையிட்டு பணிகள் பற்றி உத்தரவிட்டார்.உடன் தி.மு.க. ஒன்றியசெயலாளர் திரு. நெல்லைக்கண்ணன் கோத்தகிரி பேரூராட்சி துணைத்தலைவரும் 4 வது வார்டு உறுப்பினருமான திரு. உமாநாத் போஜன் திரு.வீரபத்திரன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் தோட்டகைத்துறையின் அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கன்னேரிமுக்கு ஊர்தலைவர் திரு.ஹாலா கவுடர் பொதுமக்கள் ஆகியோர் உடன் சென்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.



No comments:
Post a Comment