நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு ஜெகதளா சாலையில் உள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்படும் நாயை சிறுத்தை வேட்டையாடி உணவாக்கிய காட்சி அந்த வீட்டில் இருந்த சிசி டிவியில் பதிவாகி அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த பகுதியில் சிறுத்தை சர்வசாதாரணமாக சுற்றிக்கொண்டு இருப்பதாகவும் வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என அருவங்காடு மற்றும் ஜெகதளா கள்ளக்கொரை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment