மின்சாரம் தாக்கி தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 9 July 2024

மின்சாரம் தாக்கி தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

       


    நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியை சேர்ந்தவர்    மெஹ்ரூன்(71) இவர் கடந்த ஐந்தாம் தேதி காணாமல் போன நிலையில் பல இடங்களிலும் தேடி வந்தார்கள் இந்நிலையில் காட்டேரி அருகே புதர்கள் சூழ்ந்த பகுதியில் நேற்று மாலை சிலர் தேடி உள்ளனர் அப்பொழுது மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த தாயின் உடலை தூக்க சென்ற அவரது  மகன் பைரோஸ் கான் (49) மீதும் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் மற்றவர்களை நெருங்க விடாமல் தடுத்தனர் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் பெரோஸ் கானை சேர்த்து வந்து பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் இறந்த பைரோஸ் கான் கோவை மாவட்டம் கண்ணப்பன் நகர் பகுதியில் கனரக ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார் இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.


 இதற்கு இடையே அதே காட்டேரி பகுதிக்கு தேடுதல் பணிக்கு சென்ற ஆகாஷ் (21) அவருக்கும் மின்சாரம் தாக்கியதில் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது போலீசார் கூறும்போது இந்த பகுதியில் மின்சார 'எர்த்' ஒயர் ஒன்று     தொங்கியதில் சிக்கி மெஹ்ரூன் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்துள்ளார் அவர் இறந்து கிடந்ததை பார்த்த அவரது மகன் பைரோஸ் கான் அலறியடித்து ஓடிப் போய் தாயை தூக்கிய போது மின்சாரம் தாக்கி அவரும் உயிரிழந்துள்ளார் என்றனர் காவல்துறையினர். இறந்த இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது இந்த சம்பவம் குன்னூரில்  பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad