படுகர் சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மாண்புமிகு ஆ இராசா அவர்களிடம் முக்கிய கோரிக்கைகளை வைத்த வழக்கறிஞர் ஜே பி சுப்பிரமணியம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 24 July 2024

படுகர் சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மாண்புமிகு ஆ இராசா அவர்களிடம் முக்கிய கோரிக்கைகளை வைத்த வழக்கறிஞர் ஜே பி சுப்பிரமணியம்




   நீலகிரி மாவட்டம் உதகையில் நீலகிரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ இராசா அவர்களின் முகாம் அலுவலகத்தில் நீலகிரி மாவட்ட சிறு சிறு தேயிலை விவசாயிகள் சங்கத் தலைவரும் வழக்கறிஞருமான ஜே பி  சுப்பிரமணியம் இன்று நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ இராசா அவர்களை சந்தித்து பசுந்ததேயிலை உரிய விலை நிர்ணயம் செய்து தர வேண்டும் என  வலியுறுத்தப்பட்டது. 



 அப்பொழுது ஆ இராசா அவர்களிடம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 65 ஆயிரம் தேயிலை விவசாயிகள் பயனடையும் வகையில் பசுந்தேயிலை ஒரு கிலோவுக்கு குறைந்தபட்ச விலை ரூபாய் 35 நிர்ணயம் செய்ய வேண்டும் மற்றும் படுகர் சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என இரண்டு முக்கிய கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் வலியுறுத்தி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad