நீலகிரி மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்” முகாமானது 35 கிராம பஞ்சாயத்து வாரியாக 26 முகாம்கள் 11.07.2024 முதல் 01.08.2024 வரை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு 26.07.2024 அன்று 1. உதகை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சியான குந்தா ஊராட்சியில் சமுதாயகூடம், அப்பட்டி,கிண்ணக்கொரை 2. கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சியான நெடுகுளா ஊராட்சியில் பஞ்சாயத்து அலுவலகம், நெடுகுளா ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் 15 அரசு துறைகள் சார்ந்த 44 சேவைகள் பொது மக்களுக்கு சென்றடையும் வண்ணம் சம்மந்தப்பட்ட துறைகளின் அனைத்து ஒருங்கிணைந்து சேவைகளும் வழங்கப்பட உள்ளது.மேற்கண்ட சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் மற்றும் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு முகாம்களில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
கோத்தகிரியிலிருந்து தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்.
No comments:
Post a Comment