நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வாசன் என்பவரின் மகன் கவின் குமார் வயது (24) கார் டிரைவராக உள்ளார் இவருக்கும் எடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகள் ரோஷினி வயது (23) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி இருவரும் வெலிங்டன் காவல் நிலையத்திற்கு சென்று தஞ்சம் புகுந்தனர் இதனை விசாரித்த போலீசார் இருவரும் மேஜர் என்பதால் திருமணம் செய்ய அனுமதித்தனர். இதனை அடுத்து ஏப்ரல் 25ஆம் தேதி பழனியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் பின்னர் கோவையில் தங்கி இருந்த காதல் தம்பதியினர் கடந்த பத்தாம் தேதி அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை வளாகத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு கவின் குமார் பெண்ணை அழைத்து வந்துள்ளார்.
இது குறித்து தகவல் வந்தவுடன் அன்று இரவே கவின்குமார் தந்தை வீட்டிற்கு சென்ற உறவினர்கள் சிலர் வீட்டுக்கு வந்து கவின் குமாரையும் அவர்களது பெற்றோர்களையும் தாக்கி விட்டு கவின் குமார் மனைவி ரோஷினியை கடத்திச் சென்றதாகவும் போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுத்து தனது மனைவியை மீட்டுக் கொடுக்க வேண்டும் என போலீசில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் அருவங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து கவின்குமாரின் மனைவி தேடி வந்த நிலையில் ரோஷினியின் தந்தை கோபால கிருஷ்ணன் இவரை ஓசூர் அழைத்து சென்றதாக கிடைத்த தகவலின் பெயரில். குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோமதி தலைமையில் உதவி ஆய்வாளர் முகமது தவ்ஹித் உள்ளிட்ட போலீசார் அடங்கிய குழுவினர் ஓசூர் சென்று ரோசினியை மீட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக ரோஷினியின் தாயார் சாந்தி தாய்மாமன் நஞ்சுண்டன் ஆக இருவரையும் கைது செய்து குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ரோஷினியின் தந்தை கோபாலகிருஷ்ணன் சித்தப்பா ரவிக்குமார் உட்பட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாதுகாப்பு நிறைந்த தொழிற்சாலை உலகத்தில் உள்ளே செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் பணியில் இருந்த செக்யூரிட்டியும் அலட்சியமாக கண்டும் காணாமல் இருந்துள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது காதல் திருமணம் செய்து கொண்ட புது பெண்ணை அவரது உறவினர்களே கடத்திச் சென்ற சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment