2024-ம் ஆண்டிற்க்கான சுதந்திர தினத்தன்று ஜீவன் ரக்க்ஷா பதக்கவிருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 13 June 2024

2024-ம் ஆண்டிற்க்கான சுதந்திர தினத்தன்று ஜீவன் ரக்க்ஷா பதக்கவிருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது



2024ஆம் ஆண்டு இந்திய அரசு பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்காணும் பிரிவுகளில் ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சர்வோத்தம் ஜீவன் ரக்க்ஷா பதக்கம் : மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.


உத்தம் ஜீவன் ரக்க்ஷா பதக்கம் : துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.


ஜீவன் ரக்க்ஷா பதக்கம்: தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு  உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.


அதன்படி, 2024 - ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான http://awards.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

2024  ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பம் எனக்

குறிப்பிட்டு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மூன்று நகல்களுடன் மாவட்ட விளையாட்டு  மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், HADP திறந்தவெளி மைதானம், தாவரவியல் பூங்கா அருகில், உதகமண்டலம், நீலகிரி மாவட்டம் என்ற முகவரியில் 30.06.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad