நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 25 May 2024

நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்




நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்  மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவை தலைவர் போஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கழக தேர்தல் பணி செயலாளரும், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சருமான கா.ராமசந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்செல்வன், லட்சுமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் காசிலிங்கம், திராவிடமணி, ராஜூ, செந்தில்ரங்கராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பொன்தோஸ், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில், ஜூன்-3 முதல் தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகளை மாவட்டத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுவது குறித்தும்


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், அயராது உழைத்த கழக தோழர்கள் - செயல் வீரர்கள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தும்.ஜூன்-4 வாக்கு எண்ணிக்கைக்கு முகவர்கள் நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


கூட்டத்தில் நகர செயலாளர்கள்  ஜார்ஜ், ராமசாமி, சேகரன், இளஞ்செழியன், ஒன்றிய கழக செயலாளர்கள் பரமசிவன், லாரன்ஸ், நெல்லை கண்ணன், காமராஜ், பீமன், சிவானந்தராஜா, சுஜேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, ராஜேந்திரன், மோகன்குமார்,  உதயதேவன், செல்வம், அமிர்தலிங்கம், வீரபத்திரன், காளிதாசன், பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், உதயகுமார், சதீஷ்குமார்,  நடராஜன், முத்து, சுந்தர்ராஜ், ரமேஸ்குமார், சஞ்சீவ்குமார், காளிதாஸ், சின்னவர், மார்டின், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், கோமதி, காந்தல் ரவி, எல்கில் ரவி, ராம்குமார், ஆலன், ஆல்வின், விவேகானந்தன், பவீஷ், வெங்கடேஷ், சீனிவாசன், அன்வர் அப்துல்லா, சிவசுப்ரமணியம், ரஹமத்துல்லா, ராமசந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், பத்மநாபன், வினோத்குமார், பாபு, நகராட்சி தலைவர்கள் பரிமளா, சிவகாமி, பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ராம்குமார், சுனிதா, கீர்த்தனா, பேரூராட்சி தலைவர்கள் கலியமூர்த்தி, கௌரி, சித்ராதேவி, ஹேமாமாலினி,  வள்ளி, சத்தியவாணி, பங்கஜம், தொ.மு.ச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜெயராமன், போக்குவரத்து கழக தொ.மு.ச மண்டல பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் உட்பட கழக நிர்வாகிகள்  கலந்துக்கொண்டனர்.கூட்ட முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடமணி நன்றி கூறினார்.               


  தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad