குன்னூரில் கஞ்சா விற்பனை செய்த நான்கு இளைஞர்கள் கைது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 29 May 2024

குன்னூரில் கஞ்சா விற்பனை செய்த நான்கு இளைஞர்கள் கைது




நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அதிக அளவில் கஞ்சா பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில் காவல்துறையினர் கஞ்சா வியாபாரிகளை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.


 இந்நிலையில் குன்னூர் டி,எஸ்,பி குமார் உத்தரவின் பேரில்   குன்னூர் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சர்புதீன் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறை துறையினர்  சந்தேகத்தின் பெயரில் குன்னூர் ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்த பிரின்ஸ் (27) என்பவனை பிடித்து விசாரித்ததில் முதற்கட்டமாக 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் குன்னூர் வெலிங்டன் பகுதியை சேர்ந்த இம்மானுவேல் பெலிக்ஸ் (27) மற்றும் ஓட்டு பட்டறை அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (23) இந்திரா நகர் அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்த சுகுமார் (21)ஆகிய மூவரை பிடித்து விசாரித்ததில் இரண்டு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து நாள் வரையும் நேற்று இரவு குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad