ரத்தான குதிரைப் பந்தய போட்டிகள் வருகிற ஒன்றாம் தேதி முதல் தொடக்கம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 29 May 2024

ரத்தான குதிரைப் பந்தய போட்டிகள் வருகிற ஒன்றாம் தேதி முதல் தொடக்கம்


   

 ஊட்டியில் கோடை சீசன் முதல் நிகழ்ச்சியாக மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஆண்டு தோறும் குதிரைப் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு குதிரைப் பந்தயம் கடந்த ஒரு மாதமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் ஊட்டியில் கன மழை பெய்ததால் அங்குள்ள பந்தயம் ஓடுதள மைதானம் சேதம் அடைந்தது.எனவே ஊட்டியில் கடந்த 18, 19, 25, 26 ஆகிய நான்கு நாட்கள் நடக்க இருந்த குதிரை பந்தயம் ரத்து செய்யப்பட்டது. 


இந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட பந்தயங்கள் வருகிற ஒன்றாம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளனர். மேலும் வெலிங்டன் ராணுவ கோப்பை நீலகிரி தங்க கோப்பை ஆகியவற்றுக்கான போட்டிகளும் நடக்கும் என மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad