தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டு கடந்து இயக்கப்படும் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் விரும்புவர்.
மலைமுகடுகள் நீர்வீழ்ச்சி ஆகிய இயற்கை காட்சிகளை ரசித்துகொண்டு மித வேகத்தில் செல்லும் மலை ரயிலில் பயணிக்க வெளிநாட்டினர் உட்பட அனைவரும் விரும்புவர்.
நேற்றிரவு பெய்த கனமழையில் 5 ற்கும் மேற்பட்ட இடங்களில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் இன்று(23.5.2024) வியாழக்கிழமை மலைரயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையம் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
No comments:
Post a Comment