நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை அதிக வெயில் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றது. மக்கள் மிகவும் சிரமப்பட்ட நிலையில் மே மாதத்தில் வருண பகவானின் கருணையால் கோடைமழை பெய்யத்துவங்கியது.
மழை நிதானமாக நின்று பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயரத்தொடங்கியது.இன்று நீலகிரியில் மிக அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆகவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு தமிழக குரல் நீலகிரி மாவட்ட செய்திப்பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment