கடந்த 15 -05 -2024 அன்று தொடங்கிய மழை இன்று வரை தொடர்ந்து கொண்டு வருகிறது. மேலும் வரும் நாட்களுக்கு கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் உதகை 10 வது வார்டு காந்தல் சிலேட்டர் ஹவுஸ் லைன் பகுதியில் மண் வீடு ஒன்று பக்கவாட்டு சுவர் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. நகரமன்ற உறுப்பினர் அபுதாஹிர் சம்பந்தபட்ட அதிகாரிகள் கவணத்திற்க்கு தெரிவித்த காரணத்தால் பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 8000 உதகை வட்டாட்சியர் அவர்கள் பாதிக்கப்பட்ட லூர்து மேரி அவர்களுக்கு வழங்கினார் விரைவாக செயல்பட்டு நிவாரண நிதி பெற்று தந்த VAO பாலா அவர்களுக்கும் வட்டாட்சியர் உயர் திரு சரவணக்குமார் அவர்களுக்கும் அப்பகுதி மக்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத்குமார்.
No comments:
Post a Comment