கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையில் நிற்பதினால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் பயணிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி முதல் சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம் செல்லும் பாதையானது வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது மக்கள் அத்தியாவசிய பணிக்காக இரவு பகல் பாராமல் இந்த சாலையில் பயணிக்கின்றனர் இந்த நிலையில் சமீப காலமாக முள்ளூர் மற்றும் கீழ் தட்டப்பள்ளம் ஆகிய இடங்களில் உலா வரும் காட்டு யானைகள் பேருந்து மற்றும் வாகனங்களை சேதப்படுத்திவருகிறது இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் தங்கள் பயணத்தை தொடர்கின்றனர் வனத்துறையினர் யானை சாலைக்கு வரும் காரணத்தை ஆராய்ந்து தேவையான உணவளித்து காட்டை விட்டு வெளியே வராத வண்ணம் காக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment