காப்பிக்காடு பகுதியில் 17.வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை மர்மமான முறையில் இறந்துள்ளது... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 10 February 2023

காப்பிக்காடு பகுதியில் 17.வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை மர்மமான முறையில் இறந்துள்ளது...

 


சேரம்பாடி வனசரகத்திற்குட்பட்ட சேரங்கோடு  அடுத்துள்ள  காப்பிக்காடு பகுதியில் 17.வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை மர்மமான முறையில் இறந்துள்ளது... நீலகிரி மாவட்டம் பந்தலூர்  அருகே உள்ள சேரம்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட சேரங்கோடு வனப்பகுதியில் 17. வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை இறந்த கிடப்பதை வேட்டைத்தடுப்பு காவளர்கள் ரோந்து பனியின் போது கண்டு  ரேஞ்சர் ஜய்யனாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது ..பின்பு வேட்டை தடுப்பு காவலர்கள் மரத்தில் பரனி அமைத்து விடிய  விடிய பரனி அமைத்து காவல் காத்தனர்




அதன் பின்  கூடலூர் வன அலுவலர் கொம்புஹோம்காரம் அவர்களின் மேற்பார்வையில் உடல்கூறுஆய்வு சோதனை மேற்கொண்டபட்டது . முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் மற்றும் அவர்களின் மருத்துவ குழு .சேரம்பாடி  வனசரகர்  ஜயனார் தேவாலா  வனசரகர் சஞ்ஜீவி மற்றும் வேட்டைத் தடுப்பு குழு  அதிவிரைவு மீட்பு குழு போன்றோர்கள் உடன் இருந்தார்கள். இந்த காட்டு யானை இறந்து நான்கு நாட்களாகி இருக்குமெனவும் இறந்து பேனா யானை எவ்வறு இறந்தது  இறப்பிற்கு என்ன காரணம் என கால்நடை மருத்துவர் ராஜேஸ் அவர்களின் பிரேத பரிசோதனை முடிந்து அதன் உடற்கூர் ஆய்வரிக்கையில் தெரியுமென கால் நடை மருத்தவர் கூறினார்..


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad