சர்வதேச கால்பந்து இறுதி போட்டியில் வென்று ஊர் திரும்பிய இந்திய அணியின் கோத்தகிரி கேர்பென் கிரணுக்கு குவியும் பாராட்டுக்கள்.
சர்வதேச பார்வையற்றோர் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்ட வென்ற இந்திய அணியில் விளையாடிய கோத்தகிரி கேர்பென் இளைஞர் சாதனை படைத்துள்ளார்.
பார்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடுள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையில் பார்வையற்றோர் கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. இது பார்வை குறைபாடு உடையவர்களுக்கான, சத்தம் எழுப்பும் பந்துடன் விளையாடப்படும் ஒரு விரைவான கால்பந்து விளையாட்டு ஆகும். மேலும் இந்த போட்டியில் தலா 5 வீரர்கள் பங்கேற்று விளையாடுவர். இதில் கோல் கீப்பரைத் தவிர மற்ற 4 பேர் பார்வை குறைபாடுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களது கண்களை மறைக்கும் வகையில் மாஸ்க் அணிந்து விளையாடுவர். இவர்களை பயிற்சியாளர் மற்றும் கோல் கீப்பர் வழி நடத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவிலான இந்த போட்டி கடந்த சில நாட்களாக கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது. இதில் இந்திய அணிக்காக விளையாட தமிழகத்தை சேர்ந்த 2 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கோல் கீப்பராக செயல்பட கோத்தகிரி கேர்பன் கிராமத்தைச் சேர்ந்த கிரண் மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த டேவிட் ஆகியோர் தேர்வு பெற்றனர். கிரண் கோத்தகிரி கடக்கோடு பகுதியில் உள்ள பெஸ்ட் பப்ளிக் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தப் போட்டியில் உஸ்பெகிஸ்தான், இங்கிலாந்து, ஈரான், இத்தாலி, போலந்து, ஓமன் மற்றும் இந்தியா உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் இந்திய அணி உஸ்பெகிஸ்தான், ஈரான், இத்தாலி மற்றும் போலந்து ஆகிய அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து நேற்று உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. இதில் 6-2 என்கிற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்று கோத்தகிரி திரும்பிய வீரர் கிரணை விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் பாராட்டி ஊக்குவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment