நீலகிரி மாவட்டம் கூக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட உயிலட்டி ஊரில் ஆலங்கட்டி மழை பெய்தது.
கோடைவெயிலின் தாக்கம் இருந்த நிலையில் இன்று பெய்த ஆலங்கட்டி மழையால் நீரூற்று அதிகரித்து தண்ணீர் பிரச்னையை சமாளிக்கும் என உள்ளூர் மக்கள் கூறினார்கள்.
உயிலட்டி நீர்பிடிப்பு பகுதியில் இருந்து உருவாகி வரும் நீர் உயிலட்டி நீர்வீழ்சியாக உள்ளது. இது புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் சினிமா படப்பிடிப்பு நடத்தும் இடமாக இருப்பதுடன் கூக்கல்தொரை சுற்று வட்டார பகுதியின் கோடை விவசாயத்திற்கு உதவும் நீராகவும் உள்ளது. ஆகையால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment