தமிழகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட +2 தேர்வு முடிவுகள் மே மாதம் 6 ஆம் தேதி வெளியானது.
இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவு தேர்ச்சிப்பெற்றனர்.
இந்த நிலையில் துணைத்தேர்வெழுதும் மாணவ மாணவிகள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே மே 16 முதல் ஜூன் 1 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவ மாணவியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றிபெற தமிழக குரல் செய்திநிறுவனத்தின் நீலகிரி மாவட்ட செய்திப்பிரிவு சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment